tamilnadu

img

பழவேற்காட்டில் சிறப்பு தொழுகைக்கு இடவசதி: பொதுமக்கள் கோரிக்கை

பழவேற்காட்டில் சிறப்பு தொழுகைக்கு இடவசதி: பொதுமக்கள் கோரிக்கை

பழவேற்காட்டில் மிகப் பழமை வாய்ந்த பெரிய ஜாமிஆ மசூதியில் போதிய இடம் இல்லாத காரணத்தால் சாலையிலேயே ரமலான் தொழுகை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சுமார் 800 ஆண்டுகள்  பழமை வாய்ந்த பெரிய ஜாமிஆ மஸ்ஜித் உள்ளது. முகலாய கட்டிடக்கலையின் சிறப்பம்சம் இந்த மசூதியில் ரமலான்,பக்ரீத் உள்ளிட்ட விசேஷ தினங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். நாளடைவில் தொழுகை நடத்து பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  வெளியூர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்து தொழுகை நடத்துபவர் வருகையால் மசூதியில் தொழுகை நடத்தும் போது இடப்பற்றாக்  குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ரமலான் தொழு கையின் போது தொழுகை நடத்துவதற்கு போதிய இடமில்லாமல் பழவேற்காடு, பெரிய தெரு, கரையார்  தெருக்களை இணைக்கும் சாலையில் அமர்ந்து தொழுகை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மசூதியில் இடம் இல்லாததாலும், கூட்டம் அதிகம் இருந்தாலும் வெயி லில் அமர்ந்து தொழுகை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக தொழுகை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.