மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ஆர். பரமேஸ்வரனின் 25-ஆவது ஆண்டு நினைவு தினம் மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி புதனன்று (ஜூலை 17) கேரளா சமாஜத்தில் நடைபெற்றது. கட்சியின் மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்தியக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணனிடம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. முருகேஷ், வே. ஆறுமுகம், முத்துக்குமார் ஆகியோர் 501 தீக்கதிர் சந்தாக்களை வழங்கினர். மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரா. முரளி, சி. திருவேட்டை, கே. முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். மனோன்மணி, மூத்த தலைவர் எம். சந்திரன் ஆகியோர் உடன் உள்ளனர்.