சென்னை மாநகராட்சி மண்டலம் 8, கோட்டம் 100ல் தூய்மை பணி செய்யும் சி.ஏ.அங்கையா சாலை விபத்தில் பாதிக்கப்பட்டார். அவரது குடும்பத்திற்கு சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொதுச்செயலாளர் பி.சீனிவாசுலு, துணைப் பொதுச் செயலாளர் ஜி.முனுசாமி, மண்டலத் தலைவர் சி.ஏ.ஆஞ்சநேயலு, செயலாளர் சேனாதிபதி, பொருளாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.