tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சத்துணவு ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குக  செங்கல்பட்டு,

மே 13-  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு ஓய்வூதியர்களுக்கு இந்நாள் வரை மாத ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்து கொள்கிறோம். சத்துணவு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் சொற்ப ரூ.2ஆயிரம் கூட முறையாக வழங்கப்படுவதில்லை, இதுகுறித்து கேட்டால் அதிகாரிககள் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். உடனே மாவட்டஆட்சியர் தலையிட்டு முறையாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வேலை வாங்கி தருவதாக  25 பேரிடம் பண மோசடி:  பெண் கைது அம்பத்தூர்,

மே 13-  திருவள்ளூர் அருகே அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 25 பேரிடம் பண மோசடி செய்த வழக்கில் பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர், புங்கம்பேடு பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(44). இவர் அர்ச்சகர். கடந்த 2023-ஆம் ஆண்டு இவருக்கு, ஜோதி என்ற மாதுரி என்பவர்  அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர்,  ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக பணி செய்து வருவதாகவும், மருத்துவமனையில் செவிலியர், உதவியாளர் வரவேற்பாளர் உள்ளிட்ட காலி பணி இடங்களுக்கு ஆள்கள் தேவைப்படுவதால், தகுதியுடைய நபர்கள் இருந்தால் கூறுங்கள், வேலை வாங்கித் தருகிறேன் என சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். இவர் கூறியதை நம்பிய சதீஷ்குமார், தனது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 25 பேரிடம் பணிக்கு தகுந்தவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை பல தவணைகளாக ரூ.10.26 லட்சம் வரை பணத்தைப் பெற்றுள்ளார். இதன் பிறகு அவர் அந்த பணத்தை ஜோதியின் வங்கி கணக்கிற்கு ஜிபே மூலமாக  அனுப்பியுள்ளார். அதன் பிறகு, ஜோதி வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திரும்பத் தராமலும் ஏமாற்றியுள்ளார். இது குறித்து சதீஷ்குமார் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலி ஆவணத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தரணிபாய் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக மீஞ்சூர், வஉசி தெருவைச் சேர்ந்த  ஜோதி என்ற மாதுரியை (37 ) திங்கள்கிழமை (மே 12) கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் அடைத்தனர்.

வாரந்தோறும்  மாற்றுத்திறனாளிகள்  மருத்துவ முகாம்

 செங்கல்பட்டு,மே 13- வாரந்தோறும் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக ளுக்கான மருத்துவ முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்திருப்பதாவது செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் நடை பெற்று வரும் மருத்துவ முகாமினை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தரைதளம் ‘பி’ பிளாகில் முடநீக்கியல் மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை, நரம்பி யல், மனநலம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் அடங்கிய குழுவினரால் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மேற்கண்ட மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நடைபெறும் என்றும் இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மோட்டூரில் மலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை ஆட்சியரிடம் கோரிக்கை

வேலூர், மே 13- வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், செஞ்சி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் தேவாலய தலைவர் ஜான் வில்லி யம், கேவி.குப்பம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இன்பசேகரன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கோபால.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமத்தில் உள்ள மலை புறம்போக்கு நிலத்தில் சிறிய பகுதியை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழி பாட்டு தளமாக பயன்படுத்தி செய்து வருகிறோம். அந்த இடத்தை குழந்தைகள் விளையாடும் மைதானமாகவும், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் ஓய்வு எடுப்ப தற்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2024 ஆம் ஆண்டு, அந்த இடத்தில் பொது மக்கள் மழை, வெயிலில் அவதிப்படாமல் இருப்பதற்கு கொட்டகை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மே 8 அன்று இந்து அமைப்பை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் முறையான விசாரணை நடத்தாமல் வருவாய்த் துறையினர் அந்த கொட்டையை இடித்து அகற்றினர். ஆனால், புகாரளித்த அந்த நபர் அதே மலையையொட்டி 30 சென்ட் பாதை புறம்போக்கு இடத்தை ஆக்கிர மித்து வீடு கட்டி உள்ளார்.  அவருக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்கி உள்ளனர். எனவே, அனைத்து புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று  தெரிவித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக விசாரித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.வேலூர், மே 13- வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், செஞ்சி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் தேவாலய தலைவர் ஜான் வில்லி யம், கேவி.குப்பம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இன்பசேகரன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கோபால.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமத்தில் உள்ள மலை புறம்போக்கு நிலத்தில் சிறிய பகுதியை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழி பாட்டு தளமாக பயன்படுத்தி செய்து வருகிறோம். அந்த இடத்தை குழந்தைகள் விளையாடும் மைதானமாகவும், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் ஓய்வு எடுப்ப தற்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2024 ஆம் ஆண்டு, அந்த இடத்தில் பொது மக்கள் மழை, வெயிலில் அவதிப்படாமல் இருப்பதற்கு கொட்டகை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மே 8 அன்று இந்து அமைப்பை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் முறையான விசாரணை நடத்தாமல் வருவாய்த் துறையினர் அந்த கொட்டையை இடித்து அகற்றினர். ஆனால், புகாரளித்த அந்த நபர் அதே மலையையொட்டி 30 சென்ட் பாதை புறம்போக்கு இடத்தை ஆக்கிர மித்து வீடு கட்டி உள்ளார்.  அவருக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்கி உள்ளனர். எனவே, அனைத்து புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று  தெரிவித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக விசாரித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.