அர்பன் மிஷன் தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு அறிவித்தபடி கொரோனா கால பணிக்கு இரண்டு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு நிர்வாகிகள் சு.லெனின்சுந்தர், ஆர்.குப்புசாமி உள்ளிட்டோர் பேசினர்.