மத்திய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்ளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் சிஐடியு சார்பில் கல்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பகத்சிங்தாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.