கொல்கத்தா மருத்துவ பாலியல் வன்புணர்வு படுகொலைக்கு நியாயம் கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் பெண் மருத்துவர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சட்ட உதவி மன்றம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண் மருத்துவர் கூட்டமைப்பின் செயலாளர் ஜெயராணி காமராஜ், மாத சங்கத் தலைவர்கள் பி.சுகந்தி, எஸ். வாலண்டினா, அ.ராதிகா, ஜி.பிரமிளா மற்றும் மருத்துவர்கள், மாதர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.