tamilnadu

img

அம்பேத்கர் சிலை தகர்ப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலை தகர்ப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி புதனன்று (ஆக.28) திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதி சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சுந்தரம், சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.ரபீக், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில் உள்ளிட்டோர் பேசினர்.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி  தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வட்டத் தலைவர் டி.கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், பகுதி செயலாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன்,  பொருளாளர் எம்.சிவக்குமார், வட்ட தலைவர் ஜோசப், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.பூபாலன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் சு.பால்சாமி, மதியழகன், பகுதி தலைவர் லதா, செயலாளர் ஜான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர் ஆர்.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.