தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீட்டின் கீழ் மணவர்களை சேர்க்கக்கோரி போராட்டம்
திருவண்ணாமலை, மே 30- தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்க்க கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாலிபர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அளவில் தமிழக மாண வர்களின் தேர்ச்சி விகிதம் சமீப ஆண்டு களில் முன்னேற்றம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மாணாக்கர்களுக்கும் கல்வி செல்வம் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக ஆரம்பநிலை வகுப்புகளில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணாக்கர்களுக்கான கல்வி கட்டணத்தை தொடர்புடைய பள்ளி நிர்வாகத்துக்கு, தமிழக அரசு செலுத்திவிடும். வழக்கமாக, கடந்த 2024 ஆம் ஆண்டு வரை, இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மாணாக்கர்களை சேர்க்க ஏப்ரல் மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தற்போது, இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையிலும், தனியார் பளிளிகளில் இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கைக்கு உரிய நட வடிக்கை எடுக்கப்படாததால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும் பெற்றோர்களும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசு, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு வெள்ளிக்கிழமை (மே 30) கோரிக்கை முழக்க போராட்டம் நடை பெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விக்னேஷ் தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோபி, நிர்வாகிகள் இமய வர்மன், தமிழ்ச்சோலை, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் சி. எம். பிரகாஷ், நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், எழில்வாணன், சுந்த ரேசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.