சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் வியாழனன்று (ஏப்.10) மேடவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்டக்குழு உறுப்பினர் தீ.சந்துரு, பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.குணசேகரன், சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
தோழர் பி.சீனிவாசராவ் பிறந்த தினம் மற்றும் தோழர் என்.வரதராஜன் நினைவு தினமான வியாழனன்று (ஏப்.10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட குழு அலுவலகத்தில் அவர்களது படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், கே.முருகன் மற்றும் துறைமுக பகுதி குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.