சென்னை, டிச. 10 - கோவை மேட்டுப்பாளை யம், நடுகூரில் அருந்ததிய மக்கள் 17 பேரின் உயிரை பறித்த சம்பவத்திற்கு காரண மானவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.10) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டு ப்பாளையத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவார ணம் வழங்க வேண்டும், நியாயம் கேட்டு போரா டியவர்களை வன்மத்தோடு தாக்கிய காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்ய ப்பட்ட நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்களை உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும், பொய் வழக்கு களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டன. மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்ட த்தில், மாநில துணைப் பொதுச் செயலாளர் கந்த சாமி, மாவட்டச் செயலாளர் பி.சுந்தரம், பொருளாளர் எஸ்.சந்தானம், தீ.சந்துரு (மாணவர் சங்கம்), ப.ஆறு முகம் (வாலிபர் சங்கம்), வி.தனலட்சுமி (மாதர் சங்கம்), சி.எம்.குமார் (தமுஎகச), கலைவேந்தன் (தமிழ்புலிகள்) உள்ளிட்டோர் பேசினர்.