tamilnadu

பரந்தூர் விமான நிலையம் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

சென்னை, செப். 30 - பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்து வதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கிய பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பரந்தூரில் 5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள், தங்கள் விவசாய நிலங்கள், குடி யிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படு வதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர். மேலும், நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று திரண்டு 797வது நாளாக தொடர்  போராட்டங்களையும் நடத்தி வருகின்ற னர்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப் படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில்  உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங் களை கையகப்படுத்த அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.