tamilnadu

பிளாஸ்டிக்கிற்கு தடை

 சென்னை, செப்.5- கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியக் குழு உத்தர விட்டுள்ளது. அனைத்து உயர்கல்வி நிறுவனங் களும் தங்கள் வளாகத்திலும் அதனை சுற்றி யுள்ள கடைகள், உணவகங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்பொருட்க ளுக்கு தடை விதித்து பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்ற வேண்டும் என உத்தர விட்டுள்ளது. மேலும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்றுவ தற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.