tamilnadu

மாதவரம் - சிறுசேரி மெட்ரோ வழித்தடத்தில் பாறைகள் சுரங்கம் தோண்டுவதில் சிக்கல்

சென்னை, ஜூலை 18-  சென்னை மாநகர போக்குவரத்து நெருக்க டியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கி.மீட்டர் தூரத்துக்கு 32 ரயில் நிலையங்கள் அமைக்க ப்பட்டு மெட்ரோ ரயில் பயணி கள் சேவை நடந்து வருகிறது. 2ஆவது கட்டமாக மாதவரம்-சிறுசேரிக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்காக ரூ.85 ஆயிரம் கோடி செலவில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கான மண் ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. மாதவரம் - சிறுசேரிக்கு சுரங்க மெட்ரோ வழித்தடம் அமைப்பு பணிக்காக மண் ஆய்வு பரிசோதனை செய்யப்பட்டதில் கடின பாறைகள் அதிகம் இருப்பது தெரிய வந்தது. வடசென்னை பகுதியில் பல இடங்களில் 20 மீட்டர் ஆழத்தில் கடின பாறைகள் அதிகம் நிறைந்துள்ளது. தென் சென்னையில் ஓ.எம்.ஆர். வழித்தடத்தில் 10 மீட்டர் ஆழத்துக்கு பாறைகள் உள்ளன. 52 கி.மீட்டர் தூர வழித்தட பாதையில் கடின மான கரும்பாறைகள் உள்ள தால் சுரங்கம் தோண்டுவ தில் கூடுதல் கால நேரம் விரயம் ஏற்படும் என்று பொறியாளர்கள் கருது கிறார்கள். மாதவரம்-பெரம்பூர் வரையிலான வழித்தட பாதையில் அதிகமான களிமண் நிறைந்துள்ளது. பெரம்பூர்-தரமணி- சோழிங்க நல்லூர் வழித்தடத்தில் கடின மான பாறைகள் பூமிக்கடி யில் உள்ளன. இந்த பகுதி யில் 50 மீட்டர் ஆழத்துக்கு இந்த கடின பாறைகள் அதிகம் காணப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர்  கூறுகையில், “ மாதவரம் - சிறுசேரி மெட்ரோ 2ஆவது கட்ட பணிக்காக சுரங்கம் தோண்டுவதற்காக மண் ஆய்வு செய்யப்பட்டதில் பூமிக்கு அடியில் கடின பாறைகள் மற்றும் களி மண் நிறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.  எனவே  சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு கூடுதல் கால நேரம் ஆகும்” என்றார்.