tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

கிரிக்கெட் போட்டி: வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு

கடலூர், ஜூன் 24- கடலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்  நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் ஆகிய ஊர்க ளில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.  பரிசளிப்பு விழா வுக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

முதல் இடத்தை பிடித்த காஸ்மோ பாலிட்டன் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இதில் கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன், பயிற்சியாளர் பாபு மற்றும் கலை, மதியழகன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாலிபர் சங்க பகுதி பேரவை

சென்னை, ஜூன் 24 – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேப்பாக்கம்-திருவல்லிக் கேணி பகுதி பேரவை ஞாயிறன்று (ஜூன் 23) நடைபெற்றது.

இந்த பேரவையில், வீரன்புரம், ரிச்சி தெருவில் பொது கழிப்பிடம் அமைக்க  வேண்டும், பாடர் தோட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட வேண்டும், போதை பழக்கத்திற்கு அடிமை யானவர்களை மீட்க சேப்பாக்கம் பகுதியில் மறு வாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பேரவையில், சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்  கே. மணிகண்டன், பொரு ளாளர் ஜெ. பார்த்திபன், செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்வரன் ஆகியோர் பேசினர். பகுதித் தலைவராக வே.அருண்குமார், செய லாளராக பாபு, பொரு ளாளராக நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

சென்னை, ஜூன் 24-  பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதி யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வெங்கட்ராமன். இவர் டாஸ்மாக் மதுபானக் கடை கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். வெங்கட்ராமனுக்கு தேன்மலர் (32) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

  வெங்கட்ராமன் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு சென்றுவிட்ட நிலையில், தேன்மலர், தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தேன்மலர் கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டில் இருந்த 7 சவரன் நகை, வெள்ளிப் பொருள்களை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.