சென்னை, ஆக. 29 - சென்னை மாநகராட்சி யின் 4 மற்றும் 8வது மண்ட லத்தின் துப்புரவு பணியை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து சிபிஎம், விசிக, சிபிஐ உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வியாழனன்று (ஆக.29) ரிப்பன் மாளிகை யில் மேயர் ஆர்.பிரியா தலை மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அயனாவரம் வசந்தம் காலனி சென்னை நடு நிலைப் பள்ளியை வேறு பள்ளியோடு, இணைத்து விட்டு, கொளத்தூர் வட்டாட்சியர் அலுவலகமாக மாற்றவும், மண்டலம் 4 மற்றும் 8 ஆகியவற்றில் தூய் மைப் பணியை தனியாருக்கு வழங்கவும், ஏற்கனவே தனி யாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை 4 ஆண்டுகளுக்கு கண் காணிக்க 19.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி 7 பள்ளிகளை பிற பள்ளி களோடு இணைத்து மூடு வதை ஏற்க முடியாது. இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணியை தனி யாருக்கு விடுவதை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே தனியாருக்கு கொடுக்கப்பட்ட மண்டலங் களை ரத்து செய்து, மாநக ராட்சியே தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி னர்.
அதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, “மாண வர் சேர்க்கை குறைவாக இருந்ததால் 2 பள்ளிகள் மட்டும் அருகாமைப் பள்ளி களோடு இணைக்கப்பட் டுள்ளது. எஞ்சிய 5 பள்ளிகள் மூடப்படவில்லை. வசந்தம் காலனி நடுநிலைப்பள்ளி தொடர்பான தீர்மானம் நிறுத்தி வைக்கப்படுகிறது. 5 பள்ளிகளும் அப்படியே தான் உள்ளது. 2 மண்டலங் களை தனியார்மயமாக்குவ தால் தொழிலாளர்கள் பணிக்கு பாதிப்பு வராது. அவர்களை பிற துறைகளுக் கும் மாற்றிக் கொள்வோம்.” என்றார்.
இதனை ஏற்க மறுத்து சிபிஎம், விசிக, சிபிஐ உறுப் பினர்கள் முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர் களிடம் சிபிஎம் மன்றக்குழு தலைவர் ஆர்.ஜெயராமன், “மாணவர் சேர்க்கை குறை வாக இருந்தால், உட்கட்ட மைப்புகளை மேம்படுத்தி, ஆசிரியர்கள் எண்ணிக் கையை அதிகரித்து, மாண வர் சேர்க்கையை அதி கரிக்க வேண்டும். மாறாக, மூடுவது சரியான நட வடிக்கை அல்ல” என்றார்.
“2 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனி யார் மயமாக்கினால் புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். தற்போது தூய்மைப் பணியில் உள்ள ஒப்பந்த, என்யுஎல்எம் தொழிலாளர்கள் அனை வரையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி னோம். அதை ஏற்காததால் வெளிநடப்பு செய்துள் ளோம்” என்றும் அவர் கூறினார்.
வள்ளுவர் கோட்டம் மேம்பாலம்
மெட்ரோ ரயில் பணி மற்றும் நிலம் கையகப் படுத்தி முடிக்கும் வரை நிறுத்தி வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பது என்றும், நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தவிர்த்து மீதமுள்ள நிதியை பிற மேம்பால பணிக்கு பயன் படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டத் திற்கு 10 கோடி ரூபாயும், 81 பேருந்து பயணியர் நிழற் குடை அமைப்பதற்கு 8.46 கோடி ரூபாயும் ஒதுக்கியும், அண்ணா நகர் கிழக்கு 2வது முதன்மைச் சாலையின் பெயரை, தமிழறிஞர் ஒளவை நடராசன் முதன் மைச் சாலை என பெயர் சூட்ட மன்றம் அனுமதி வழங்கியது.
கூவம் ஆறு சீரமைப்பு
நேரமில்லா நேரத்தின் போது மாமன்ற உறுப்பினர் கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, நீர்வளத்துறை ஆதாரத் துறையோடு இணைந்து ரூ.735 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அனைத்து உறுப் பினர்களுக்கும் அடுத்த கூட்டத்திற்குள் டிஜிட்டல் கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அருகே உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகி றதா என தொடர்ந்து கண் காணிக்கப்படும் என்றார்.