புதுச்சேரி, ஜூன் 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற் குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன் ஆகியோர் சட்டப்பேரவையில் முதல் வர் நாராயணசாமியை சந்தித்து மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றிடகோரி மனு அளித்த னர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: தங்கள் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இக்காலத்தில் விவசாய பயிற்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், காவலர் பயியிடத்திற்கு வயது வரம்பு தளர்வு, புதிதாக விண்ண பித்த முதியோர், விதவைகளுக்கு உதவித் தொகை அமலாக்கப் பட்டுள்ளத் மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் மாநில மக்களின் சமூக பொருளாதாரம் உயர்கின்ற வகையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி களும் பல நிறைவேற்றப்படவில்லை. மத்திய பாஜக அரசு மாநிலங்களின் உரிமை மற்றும் அதிகாரங்களை மட்டுப்படுத்தி வருகிறது. மேலும் மாற்று ஆட்சியில் உள்ள மாநி லங்களில் ஆளுநர்கள் மூலம் தலை யீடு செய்து வருகிறது. மக்க ளாட்சி ஜனாநயகத்தில் யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சை இன்றள வும் தொடர்கிறது. இதன் பாதிப்பை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கி றார்கள். மாநிலத்தில் நிலவும் அரசி யல் சூழலில் மக்கள் ஆட்சி மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், மேலும் மாநிலத்தின் நிதி அதாரங்களை மேம்படுத்திட, முதலீடு வருவாய்களை அதிகப்படுத்த வேண்டும், மாநில பொதுத் துறை நிறு வனங்களை பாதுகாக்க வேண்டும். மாநில அரசின் சுதந்திரமான செயல் பாடுகளுக்கு அடிப்படையான முழு மாநில அந்தஸ்துக்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் அரசின் பட்ஜெட்டில் அரசு அறிவித்த அனைவருக்கும் இல வச அரிசி வழங்க வேண்டும். மின்கட்ட ணத்தை குறைக்க வேண்டும். நக ராட்சி வரிகளை முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலி யுறுத்தப்பட்டுள்ளன.