“பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள் விநோதமாக உள்ளன. அவருக்கு உரை தயாரிக்கும் எழுத்தாளர்கள் சமநிலையை இழந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. மக்களவைத் தேர்தலில் மீதமுள்ள காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளையும் அபத்தமான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவார் என்பது தெளிவாகிறது. அவரது பேச்சை இந்திய மக்கள் மட்டும் கேட்கவில்லை. ஒட்டுமொத்த உலகமும் அவரது பேச்சை உன்னிப்பாக கண்காணித்து அலசி ஆராய்ந்து வருகிறது. பிரதமரின் பேச்சால் இந்தியாவின் பெயர், புகழுக்கு இழுக்கு ஏற்படுகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.