tamilnadu

img

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் சீரான வேகத்தில் பரவி வருகிறது. தினமும் சராசரியாக 50 பேர் வீதம் கொரோனவால் பாதிக்கப்படுவதால் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊரடங்கில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப் பதிவு, வாகன பறிமுதல், அபாரதம் போன்றவை விதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ஊரடங்கு வரும் 14-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

;