tamilnadu

img

2-வது பரிசோதனையிலும் பாசிட்டிவ்...   அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி....  

சென்னை 
அரசு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி. அன்பழகனுக்கு கடந்த வாரம் கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கே.பி. அன்பழகன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொற்று இல்லை எனக் கூறினர்.

இந்நிலையில் 2-வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மணப்பாக்கம் மியாட் என்ற தனியார் மருத்துவமனை  மருத்துவமனை உறுதி செய்துள்ளது. தற்போது கே.பி. அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

;