tamilnadu

பொன்னம்மாள் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி

சென்னை, மே 3 -10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள பொன்னம்மாள் மெமோரியல் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் பொன்னம்மாள் பள்ளியிலிருந்து பங்கேற்ற 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு மாணவர் 500க்கு 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மற்றொரு மாணவர் 435மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.10 மாணவர்கள் 425 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இந்த பள்ளி பங்கேற்ற 24 பொதுத் தேர்வுகளில் 21 முறை 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.பள்ளியின் தாளாளர் பொன்.ஜி.தர்மராஜன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர் களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.

;