சென்னை, ஜூன் 23 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரி க்கை மீது நடைபெற்ற விவாதங்க ளுக்கு துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்தார்.
கொக்கரிப்பு அடங்கியது!
அப்போது தனது உரையின் துவக்கமாக, “2024 மக்களவைத் தேர்தல் வரலாற்றில் மிக முக்கி யத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவோம். இந்த நாட்டை மீண்டும் பிடிப்போம். நாட்டின் பெயர் ‘இந்தியா” என்பதை மாற்றுவோம். அரசமைப்புச் சட்டத்தை மாற்று வோம் என்றெல்லாம் சிலர் கொக்க ரித்தனர். ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள குறுக்கு வழி கள் என்னென்ன உண்டோ? அவற் றையெல்லாம் கையில் எடுத்தனர்.
தன்னாட்சி அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் மீது ஏவி விட்டனர். சிலரை மிரட்டி தங்கள் கட்சிக்குள் இணைத்துக் கொண்டனர். மேலும் பல சித்து விளையாட்டுகளை நடத்தினர்” என்றார்.
அப்போது பாஜக உறுப்பினர் கள் அமைச்சரின் பேச்சுக்கு எதி ர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர்.
எனினும் தொடர்ந்து பேசிய அமைச்சர் “வெறுப்புப் பிரச்சா ரத்தை முன்னெடுத்தவர்களின், உண்மைக்கு மாறான பிரச்சா ரங்களை முறியடித்து தமிழ்நாடு பெற்ற வெற்றியை இந்திய நாடு திரும்பிப் பார்க்கும் நிலை ஏற்பட் டுள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்ற இந்த மண்ணில் வெறுப்புப் பிரச் சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். உண்மைக்கு புறம்பாக பிரச்சா ரங்களை மேற்கொண்டனர்” என்றார்.
அப்போது, பேரவைத் தலைவர் குறுக்கிட்டு, ‘சப்ஜெக்டுக்கு வாருங் கள்’ என்றார். எனினும், “நாம் ஒரு அரசியல் கட்சி நடத்துகிறோம். ஆகவே அரசியலை பேசித்தான் ஆக வேண்டும். பெரும் நெருக்கடி யான காலகட்டத்தில் மக்களவைத் தேர்தலை சந்தித்து 40க்கு 40 என்று வெற்றி பெற்றிருக்கிறோம்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூற, சபாநாயகர் மீண்டும் குறுக்கிட்டு, ‘பால்வளத் துறை மானியக் கோரி க்கை மீதான விவாதங்களுக்கு மட்டும் பதில் சொல்லவும். அதைத் தாண்டி அரசியல் பேசவே வேண் டாம் தொட்டுக் கொள்ளவும் வேண் டாம். நமது அரசின் சாதனைகள் தலைவர்கள் பற்றி மட்டும் பேசுங்கள். தேவையில்லாத பிரச்ச னைகளை பேசி வீண் பிரச்சனை யை உருவாக்க வேண்டாம்’ என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், நானும் அதைத் தாண்டி பேசவில்லை. அவை நாகரிகத்தை தாண்டியும் பேசமாட்டேன் என்பது உறுதியளிக்கிறேன்.
மனிதவள குறியீட்டில் தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் வெறுப்பு அரசியல் பிரச்சாரத்தில் இந்தியா முதலிடத் தில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். (மீண்டும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு)
ஜனநாயகம்-மதச்சார்பின்மையை பாதுகாப்போம்!
நாடு இரண்டு காரணங்களுக் காக நமது தலைவரை (மு.க. ஸ்டாலின்) உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்கிற தத்துவம். அதன் படி இங்கு பாலின வேறுபாடுகள் கிடையாது. சாதி, மோதல்களுக்கு இடம் இல்லை. மத வேறுபாடு கிடையாது. ஏற்றத்தாழ்வுகள் இல்லை; ‘எல்லோரும் சமம்’ என்கிற சம தர்மத்தை முன்னிறுத்தி அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு வகை களில் நன்மை பெறும் நல்லாட்சி நடத்தி வருவது.
மற்றொன்று, எந்த சூழ்நிலை யிலும் ஜனநாயக மரபுகளை தமிழ்நாட்டில் அழிய விடமாட் டோம். இந்திய துணை கண்டத்தில் ஜனநாயக மரபுகளை அழிய விட மாட்டோம். சமதர்ம கருத்துக்களை சமத்துவத்தை தொடர்ந்து வலி யுறுத்துவோம்.
‘மதச்சார்பற்ற நாடு இந்தியா’ என்ற பெருமை இந்திய துணைக் கண்டம் முழுவதும் தொடர்ந்து நீடிக்கும் என்று திசை காட்டும் தலைவராக தமிழக முதலமைச்சர் பரிணமித்து கொண்டு வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
பால் கையாளும் திறனை
66 லட்சம் லிட்டராக உயர்த்த ‘ஆவின்’ முடிவு!
சென்னை, ஜூன் 23- தமிழ்நாடு சட்டப்பேர வையில் பால்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். அப் போது துறை சார்ந்த 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். உரையின் போது, அவர் மேலும் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகம், சீர் கேட்டால் பெரும் நட்டத்தில் இயங்கி வந்தது. கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்த அரசு எடுத்த நட வடிக்கையால் பால் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கொள்முதல் நாள் ஒன்றுக்கு 35 லிட்டராக அதி கரித்துள்ளது. தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிப்ப தற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம். பால் உற்பத்தியை மேலும் அதிகரித்து அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை யை மேற்கொண்டு வருகிறோம். விளிம்பு நிலை மக்க ளும் வேலையில்லா இளைஞர்கள் பால் பண்ணை அமைக்கவும் பால் உப பொருட்கள் விற்பனை செய்ய வும் முன்வந்தால் துறை சார்பில் உதவி மற்றும் மானி யம் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை அதிகரித்துள்ளோம்.
நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கி யிருக்கிறோம். பால் உப பொருட்களின் தரத்தை ஆவின் நிர்வாகம் உயர்த்தியதால் விற்பனையும் அதிகரித்து இருக்கிறது. தற்போது 48 லட்சம் லிட்டர் பால் கையாளும் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
2024-25 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப் படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்க ளுக்கு எஸ்எஸ் (Stainless Steel) பால் கேன்கள், பால் அளவை உபகரணங்கள், பதிவேடுகள் மற்றும் பால் பரிசோதனை கருவிகள் ஆகியவை வழங்கப் படும். பசுந்தீவன பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 100 லட்சம் செலவில் பசுந்தீவன புல் கரணைகள் வழங்கப்படும்.
ரூ. 234 லட்சத்தில் பால் ஆய்வுக் கூட்டங்கள் அமைக்கப்படும். களப் பணியாளர்கள் கால்நடை மருத்துவர்கள், விரிவாக்க அலுவலர்கள், கிராம நல ஊழியர்கள் போன்ற 3000 பணியாளர்களுக்கு பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிகள் வழங்கப் படும். தரமான பால் கொள்முதல் மற்றும் பால் உற்பத்தி யை உறுதி செய்யும் நோக்கில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கரூர் ஒன்றியங்களில் ரூ. 234 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வுக்கூடங்கள் தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நிறுவப்படும். இவ்வாறு மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.