tamilnadu

img

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியீடு

சென்னை, பிப்.21-  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்  வாயன்று (பிப்.20) தலைமைச் செயல கத்தில், தமிழகத்தில் மகளிர் நலனை மேம்  படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப் பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை  2024”-யை வெளியிட்டார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலை மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நலத்துறை ஆணையர் வே. அமுதவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

“தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சமூக நீதி,  சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகார மளித்தல் போன்றவற்றின் அடிப்படை யில் இம்மாநில மகளிர் கொள்கை உரு வாக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையா னது, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை  நடைமுறையில் இருக்கும்.

மேலும், இக்கொள்கையினை ஐந்  தாண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தி யாவில் மகளிர் மேம்பாட்டுக்கென தனி யான ஒரு கொள்கையை வெகுசில மாநி லங்களே இதுவரை வெளியிட்டுள்ளன” என்று அறிக்கையின் துவக்கத்தில் குறிப் பிட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

கல்வி - நலவாழ்வு
பாலின உணர்திறன் கொண்ட கல்வி  முறையை நிறுவுதல் மற்றும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல். வளரிளம் பெண்கள் மற்றும்  மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச் சத்து நிலையை மேம்படுத்துதல். வேலை வாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதி கரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழில் - வேலைவாய்ப்பு
அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும்  அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண்  பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும்  அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல். பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்  கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு  ஆதரவளித்தல். பெண்கள் அதிக ஊதி யம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறு வதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்கு வித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல். தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல். நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனு தவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.

அரசியல் பங்கேற்புக்கு ஊக்கம்
மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க  ஊக்கப்படுத்தப்படும். அரசில் உள்ள  பல்வேறு துறைகள் மற்றும் பங்குதாரர் களின் பங்கேற்பின் மூலம் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்த கொள்கையின் நோக்கத் தினை அடைய வழிவகை செய்யப்படும். இக்கொள்கையில் இணைந்துள்ள பல்வேறு துறைகள், தங்கள் திட்டங்களை கொள்கையின் நோக்கங்களுடன் இணைந்து உருவாக்க வேண்டும்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையானது ஒருங்கிணைக்கும் துறை யாக இக்கொள்கை செயல்படுத்துதலை கண்காணிக்கும். சமூக நலத்துறை இயக்கு நரக அலுவலகத்தில் ‘செயல்படுத்தல் மற்  றும் கண்காணிப்பு அலகு’ அமைக்கப் படும் உள்ளிட்ட அம்சங்கள் மகளிர் கொள்  கையில் இடம்பெற்றுள்ளன.

கண்காணித்தல் 
தலைமைச் செயலாளரின் தலைமை யில் உயர்மட்ட அளவிலான பெண்கள் உரிமைக்குழு, தொடர்புடைய பிற துறை களுடன் இணைந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தமிழ்நாடு மாநில மக ளிர் கொள்கையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து இடைக்கால திருத்  தங்களை பரிந்துரைக்க வேண்டும். இதே போன்று, மாவட்ட ஆட்சியர் தலைமை யில், மாவட்ட அளவிலான கண்காணிப்புக்  குழு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையின் செயலாக்கத்தை கண்கா ணித்து, எதிர் கொள்ளப்படும் சவால் களை சரிசெய்ய வேண்டும்.

இக்கொள்கை, சமூகம், பொருளாதா ரம் மற்றும் அரசியலில் அதிகாரப் பகிர்வை  பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலை வாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்துவதுடன், மகளிர் தங்களுக்குள் புதைந்துள்ள, இது வரை கண்டறியாத சக்திகளை வெளிக்  கொணர்ந்து பெண்கள் சுயமரியாதை யுடன் வாழ்ந்திடவும், அவர்களுக்கு பாது காப்பான, ஆரோக்கியமான, லட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.