காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.