சென்னை, ஆக. 19 - திருவொற்றியூரில் மாற் றுத்திறனாளிகளிடம் காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டனர். தமிழக அரசு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்தது. இந்த தொகை பெரும்பாலா னோருக்கு கிடைக்கவில்லை. எனவே, விடுப்பட்ட அனை வருக்கும் நிவாரணம் கோரி செவ்வாயன்று (ஆக.18) திரு வொற்றியூர் மண்டல அலு வலகத்தில் மாற்றுத்திற னாளிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இதனையறிந்து அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் குணசேகர், சங்க நிர்வாகி களை அவதூறாக பேசி னார். சங்கத் தலைவர் ஜெயச் சந்திரனை வலுக்கட்டாய மாக கைது செய்தார். பார்த்தாலே தெரியும் அளவிற்கு ஊனம் இருப்ப வர்களிடம் அடையாள அட்டை இல்லை என்று கூறி போராட்டத்தில் இருந்த வர்களை வெளியேற்ற முயற்சித்தார். இந்த அராஜ கத்தை வீடியோ எடுக்க முயன்றவர்களை முரட்டுத் தனமாக தாக்கினர். இதனை யடுத்து காவல்நிலை யத்தில், உதவி ஆய்வாளர் குணசேகரன் மீது நடவ டிக்கை கோரி சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், விடுபட்ட அனைவருக் கும் ஒரு வாரத்திற்குள் நிவார ணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்த னர். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கி. ராதை, துணைத் தலைவர் ஆர்.செல்வகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.