tamilnadu

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சென்னை, ஆக.1- சென்னையில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்,  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்,  வியாழனன்று (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட்ட அறி விப்பில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி கள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சென்னை, எழும்பூர், மாநில அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில், வரும் 7-ம் தேதி காலை 9.00 மணியளவில் நடை பெற உள்ளன. ஒவ்வொரு போட்டியி லும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக  ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம்,  மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம்  மற்றும் சான்றி தழும் வழங்கப்படும். போட்டிக்கான தலைப்பு கள் போட்டி தொடங்கு ம்போது அறிவிக்கப்பெறும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பெறும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பயிலும் பள்ளியின் தலைமை யாசிரியர், கல்லூரியின் முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரையைப் பெற்று போட்டி நாளன்று துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும். போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதி விறக்கம் செய்து கொள்ளலாம்,  என தெரி விக்கப்பட்டுள்ளது. 

;