கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 இலட்சம் வைப்பு தொகையாக வைக்கப்படும் எனவும் அறிவிப்பு.