tamilnadu

img

ஓட்டுநர் தினத்தில் உறுதிமொழி ஏற்பு!

சென்னை, ஜூன் 1- ஜூன் 1 ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு சென்னை  பெரு நகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் சார்பில் “நாட்டின் இறையாண் மையை பாதுகாத்து, இந்திய மக்களின் உயிர்,  உடைமைகள், உள்ளிட்ட வைகளை போற்றும் வகை யில் சாலை விதிகளை மதித்து, பாதுகாப்பாக வாகனங்களை இயக்கி, விபத்தில்லா பயணத்தை, போக்குவரத்தை உறுதி செய்வோம். ஓட்டுநர்களை அணிதிரட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி  அம்பத்தூர் தொழிற்பேட் டையில் நடைபெற்றது. 

இதில் அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் சு.பால்சாமி, ஏ.ராயப்பன், கண்ணன், சந்தானம், சிதம்பரம், சிவ சங்கர், மாநகர் போக்கு வரத்துக் கழக நிர்வாகி ரவிசங்கர் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கிண்டி ரவுண்டானா அருகே உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பா.பாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, ஆட்டோ அண்டு டாக்சி ஓட்டுநர் சங்க தலைவர் ஜெ.முகமது அனீபா, பொதுச்  செயலாளர் எம்.உமாபதி, பொருளாளர் பக்கிரி, வாகன தொழிலாளர் சங்க  செயலாளர் ஏ.எல். கண்ணன்  உள்ளிட்டோர் பேசினர்.