tamilnadu

மருத்துவ பெண் ஊழியர் பணி நிரந்தரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

 சென்னை, ஜூன் 20- பஞ்சாயத்து மருந்தகத்தில், 34 ஆண்டு களாக பணியாற்றிய துப்புரவு பெண் ஊழி யரை பணி நிரந்தரம் செய்யும்படி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், சக்கர பள்ளி பஞ்சாயத்து ஒன்றிய மருத்துவமனை யில், 1985-ல்துப்புரவு பணியாளராக, சரசு  என்பவர் பணியில் சேர்ந்தார். பல ஆண்டு கள் ஆகியும், பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. பணி வரன்முறைப்படுத்த, 2001,  2006 ஆண்டுகளில், கலெக்டருக்கு, பஞ்சா யத்து ஒன்றிய ஆணையர் பரிந்துரைத் தார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 1985 ஆகஸ்ட் முதல், பணி வரன்முறை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன் றத்தில் சரசு மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்  விசாரணைக்கு வந்தது. சரசு சார்பில்,  வழக்கறிஞர் பி.சாலமன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு பிறப்பித்த உத்தரவில், மாவட்ட வேலை வாய்ப்பகம் வழியாக பரிந்துரைக் கப்பட்டு, 1985 ஆம் ஆண்டில் துப்புரவு ஊழியராக சரசு நியமிக்கப்பட்டார்.  பல ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு அரசு  உத்தரவின்படி, தினசரி ஊதிய அடிப்படை யில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி யவர்களை, பணி வரன்முறை செய்ய  வேண்டும். இந்த அரசாணை பிறப் பிக்கப்பட்ட தேதியில், மனுதாரர் பணி யில் இருந்துள்ளார். பணி வரன்முறை பெற, அவருக்கு உரிமை உள்ளது. வேலை வாய்ப்பகம் வழியாக பரிந்துரைக்கப்பட்டு, பணி நியமனம் பெற்றுள்ளார் என்பதை, அரசே ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, பணியில் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து, பணி வரன்முறை செய்யும்படி, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. அதனால், வரும் பணப் பலன்களையும், அவருக்கு வழங்க  வேண்டும். 12 வாரங்களில், இதை நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.