tamilnadu

img

கே.பாலகிருஷ்ணன் உண்டியல் ஏந்தி நிதி வசூல்

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி மக்களிடம் மத்திய சென்னை  மாவட்டத்தில் நிதி திரட்டும் இயக்கத்தை தொடங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக துறை முகம் பகுதியில் நடைபெற்ற வசூல் இயக்க த்தை என்.எஸ்.சி போஸ் சாலையில்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து வியாபாரிகளிடம் உண்டியல் ஏந்தி நிதி திரட்டினார். சாலையோர வியாபாரிகள் மனமுவந்து வந்து உண்டியலில் பணத்தை போட்டனர். சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த வசூலில் ஒரு லட்சத்து 90ஆயிரத்து 332 ரூபாயை மக்கள் வாரி வழங்கினர்.  துறைமுகம் பகுதிச் செயலாளர் எம்.ஜலாலுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த  இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா,  செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, இ.சர்வேசன், எம்.தனலட்சுமி, எஸ்.கே.முரு கேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இரா.அருள்குமார், எஸ்.மனோன்மணி, சி.மிருதுளா, வியாபாரிகள் சங்க தலைவர் எம்.வி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.