சென்னை,ஜூன் 8- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப் பட்டுள்ளனர்.
பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பேருந்துகளை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காத வர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தனியார்பேருந்துகள் நிறுவனத்தி னர் டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்துள் ளது.
ஜூன் 10 பள்ளிகள் திறக்கப்படும் நிலை யில் சென்னை, கோவை நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது.
சாதாரண நாட்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சாதாரண இருக்கைகளுக்கு ரூ.600 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில் படுக்கை வசதிக்கு ரூ.900 முதல் 1200 வரை வசூலிக்கப்படும். மேலும் ஏ.சி.படுக்கை வசதிக்கு பேருந்துகளின் தரத்திற்கு ஏற்ப ரூ.1,200 முதல் 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
பள்ளி திறக்கப்படவுள்ளதால் ஞாயிறன்று சென்னை செல்ல ஆம்னி பேருந்துகளில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில பேருந்துகளில் ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,300, ரூ.1400, ரூ.1500 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.