tamilnadu

img

பூங்காவை சுத்தம் செய்த வாலிபர்கள்: மக்கள் பாராட்டு

சென்னை, ஜூலை 8 -
ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள பூங்காவை சுத்தம் செய்த வாலிபர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

தாம்பரம் மாநகராட் சிக்கு உட்பட்ட ராஜகீழ்ப் பாக்கம், இங்குள்ள சரவணா நகர், சிவசக்தி நகர், ராஜீவ் காந்தி நகர், பார்வதி நகர் மக்கள், சரணாநகர் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் போதிய பராமரிப்பின்றி பூங்காவில் செடிகொடிகள் முளைத்து குழந்தைகள் விளையாட முடியாத அளவிற்கு புதர் மண்டியது. இளைஞர்கள், முதியவர்கள் நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.

இதனையடுத்து எஸ்எஸ்ஆர்பி குடியிருப் போர் சங்கத்தின் ஒருங் கிணைப்பில் ஞாயிறன்று (ஜூலை 7) வாலிபர் சங்கத்தினர் பூங்காவை தூய்மைப்படுத்தும் உழைப்பு தானத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்கத்தின் தாம்பரம் பகுதி ஒருங்கிணைப் பாளர் அனந்தபிரியன் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் பூங்காவை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்தனர்.