விழுப்புரம், டிச.31- சென்னையில் இருந்து விழுப்புரம் நகரத்திற்குள் வரும் போது நுழை வாயிலாக விளங்கும் அய்யங்கோவில் பட்டு ஊராட்சியில் சாலையோரம் கொட்டப் பட்டுள்ள துர்நாற்றத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். விழுப்புரம் நகராட்சியின் எல்லையை ஒட்டி உள்ளது அய்யங்கோவில் பட்டு ஊராட்சி, இந்த ஊராட்சியின் எல்லை, விழுப்புரம் நகரத்தின் எல்லை வரை விரிந்துள்ளது, இதில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலை செல்கிறது,
இவ்வழியாக விழுப்புரம் நகரத்திற்குள் பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் வேலைக்கு செல்லு வோர்,வெளியூர் பயணிகள் என தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் வாக னங்களிலும் பேருந்துகளிலும் பயணித்து விழுப்புரம் நகருக்குள்ளும், விழுப்புரத்தின் நகரத்தை கடந்தும் சென்று வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலையின் சாலையோரம் தொடர்ந்து கழிவுகளை பலர் கொட்டி விட்டு செல்கின்றனர்,
இதனை தடுக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகம் அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுத்தப்படுத்தி, அந்த இடத்தில் மீண்டும் கழிவுகளை கொட்டினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.
ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் கழிவுகளை பலர் அதே இடத்தில் கொட்டி வருகின்றனர், இதன் மூலம் பன்றி, நாய்கள் கழிவுகளை சாலையில் இழுத்து போட்டுவிடுகிறது. மேலும் கழிவுகளின் துர்நாற்றம் அதிகளவு வீசி வருவதால் அவ்வழியே செல்லும் பேருந்து மற்றும் வாகன ஓட்டிகள் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது, உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சியோ அல்லது மாவட்ட நிர்வாகமோ தலையிட்டு அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவேண்டும், மீறி கொட்டுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.