tamilnadu

img

ஓய்வூதியத்தை உறுதி செய்ய வேண்டும்

சென்னை, மார்ச் 11 - ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப் படும் என்பதை உறுதி செய்ய வலி யுறுத்தி சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு  ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் 2010ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் தொடர மைப்பு கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என மூன்று அரசு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கத்தை, உற்பத்தி, விற்பனை, பசுமை மின்சார நிறுவனம் என மூன்றாக பிரிக்க கடந்த மாதம் முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.  அதில்  ஊழியர்களுக்கும், ஓய்வூதி யர்களுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்று கூறி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விரு அமைப்புகளின் கருத்துக்களை கேட்டு, அதன்மீதான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பி க்க உத்தரவிட்டது. அதன்படி, வாரி யத்திற்கு எழுத்துப்பூர்வமான கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மீது நிர் வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளது. 

இந்த நிலையில், தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு  திங்களன்று (மார்ச் 11) மாநிலம் முழு வதும் தர்ணா நடத்தியது. அதன் ஒரு பகுதியாக சென்னை மண்டலம் சார்பில் வாரிய தலைமையகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பெற்றுவரும் உரிமைகள் அனைத்தும் தொடரும் என தமிழக அரசு நிபந்த னையற்ற உத்தரவாதம் வழங்க வேண்டும். புதிதாக பிரிக்கப்படும் நிறு வனங்கள் அரசு நிறுவனங்களாகவே தொடரும், தனியார்மயமாக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க தனி நிதியம் உருவாக்குவதை கைவிட்டு, வாரியமே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியம் தொடர்ந்து வழங்குவதற்கு அரசு முழு பொறுப் பேற்க வேண்டும், வாரிய ஆணை 2ஐ  ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்ட த்தில் பேசிய தலைவர்கள் வலி யுறுத்தினர்.

நல அமைப்பின் சென்னை மண்ட லச் செயலாளர் எஸ்.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மாநில நிர்வாகி கள் கே.ஆர்.முத்துசாமி, கே.நட ராஜன், என்.தீரமணி, முகவை பெரு மாள், வி.வசுமதி, ஆர்.ராஜாமணி உள்ளிட்டோர் பேசினர். நல அமைப் பின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெக தீசன் நிறைவுரையாற்றினார்.