“அனைத்து கலைகளுக்கும் மூல ஆதாரமாக இருப்பது கிராமியக் கலைகள் தான். அது சில பேருக்கு புரிவதில்லை. டெய்ரி மில்கிற்கு தரும் மதிப்பை கடலை மிட்டாய்க்கு கொடுப்பதில்லை. தற்போது கிராமியக்கலைகள் அழிந்து வருகிறது. தப்பாட்டத்தை சாவு வீடுகளில் தான் அடிப்பார்கள் என தப்பாக புரிந்து கொண்டிருக்கின்றனர்” என திரைக்கலைஞர் தீபா சங்கர் கூறினார்.