திருக்கழுக்குன்றம், அக். 8- சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்மாறன் (21). கார் ஓட்டு நர். இவர் தனது மனைவி சுவேதா (20), அவர்களது உறவினர் இந்துமதி (26), அவரது மகன் பரத் (10 மாதம்) உட்பட 7 பேர் சென்னை புளியந்தோப்பில் இருந்து மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு திங்கட்கிழமை மாலை காரில் வந்தனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருக்கும்போது, கார் நிலைதடுமாறி சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜென ரேட்டர் மீது மோதியது. உடன டியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காரில் இருந்த வர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் காவல் துறையினர் காயம் அடைந்த வர்களை மீட்டு, கேளம்பாக்க த்திலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களை மருத்து வர்கள் பரிசோதனை செய்த தில், தமிழ்மாறன், சுவேதா வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. பரத் உடல் நிலை கவலைக்கிட மாக இருந்ததால் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளான். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்மாறன், சுவேதா விற்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது என்பதும், விபத்து க்குள்ளான இவர்களது கார் மோதிய ஜெனரேட்டர், பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையையொட்டி மின் அலங்காரத்திற்காக நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.