தமிழ்நாடு உருவான நாளில், தமிழ்நாடு உருவான வரலாறு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விநியோகித்தனர். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.சுப்புராயன், நகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.