tamilnadu

img

தண்ணீரின்றி தவிக்கும் பல்லாவரம் நகராட்சி தினசரி குடிநீர் கேட்டு ஆணையரிடம் முறையீடு

சென்னை, மே 21 -பல்லாவரம் நகராட்சியில் தினசரி குடிநீர் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைர்வர்கள் வலியுறுத்தினர்.பல்லாவரம் நகராட்சியில் குடிநீர் மட்டுமின்றி இதர தேவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல்லாவரம் பகுதியில் இரவுநேரங்களில் பெரியவர்களும், பகல் நேரங்களில் சிறுவர்களும் தண்ணீருக்காக இருசக்கர வாகனங்களில் அலைகின்றனர்.பல்லாவரம் நகராட்சியில் ஒருவருக்கு தினசரி 46லிட்டர் தண்ணீர் தருவதாக கூறுகிறர்கள். ஆனால் 15லிட்டர் தண்ணீர் கூட கிடைப்பதில்லை. இந்நிலையில் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து நகராட்சி ஆணையர் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், பகுதிச் செயலாளர் எம்.சி. பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ். நரசிம்மன், பி. ஜீவா உள்ளிட்டோர் ஆணையரை சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, பல்லாவரம் சுற்றியுள்ள நீர்நிலைகள், குவாரிகளில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். குறிப்பாகதிருநீர்மலை பெரிய ஏரியில்உள்ள தண்ணீரை சுத்திகரித்து திரிசூலம் பேரூராட்சி,பல்லாவரம் நகராட்சி, பம்மல்நகராட்சி, அனகை நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும். வறட்சி காலத்திலும் சில இடங்களில் நீரோட்டம் இருப்பதால், அண்ணா பல்கலைக் கழகம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை பயன்படுத்தி ஆழ்துளை குழாய்களை அமைக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் ஒப்புக்கொண்டபடி தினசரி 50லட்சம் லிட்டர் தண்ணீர் பெறவேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.லாரிகளில் தண்ணீர்வழங்குவதை முறைப்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் சீராக விநியோகிக்க வேண்டும். கீழ்க்கட்டளை ஏரி, அஸ்தினாபுரம் ஏரி போன்றவற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.நகராட்சிப் பகுதியில், தினசரி ஒருவருக்கு 120 லிட்டர் தண்ணீர் வழங்கும் வகையில் நீண்டகால திட்டம் வகுப்பதற்கான ஆலோசனைகளை தலைவர்கள் தெரிவித்தனர். அதனை பரிசீலிப்பதாக ஆணையர் ஒப்புக் கொண்டார்.