மழையில் நனைந்து சேதமாகும் நெல் மூட்டைகள்!
போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்
திருவண்ணாமலை, மே 20- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால், மழையில் நனைந்த நெல் மூட்டைகள் சேதமாகி யுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் விவசாயிகள் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தி அதிகமாக நடைபெறும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டமாகும். திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், போளூர், வந்த வாசி, ஆரணி, செய்யாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் உற்பத்தி அதிகம் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போளூர் அருகே இயங்கி வந்த தரணி சர்க்கரை ஆலை இயங்காத தால், வழக்கமாக கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கரும்புக்கு மாற்றாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தற்போது தினசரி 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வரு கிறது. ஆனால், அங்கு விவ சாயிகள் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பல்லாயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. கடந்த 16 ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்கி இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி வரு கின்றனர். இந்நிலையில், போளூ ரில் செயல்பட்டு வரும் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சிபிஎம் நிர்வாகிகள் நேரடியாக கள ஆய்வு செய்தனர். போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டை கள் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு கள் இல்லை. எனவே போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்கட்டமைப்பு வசதி களை ஒரு சில மாதங்களில் செயல்படுத்தப்படும் என அதிகாரி கள் விளக்கம் அளித்தனர். கலசபாக்கம் ஒன்றியச் செய லாளர் பி. சுந்தர், போளூர் ஒன்றிய செயலாளர் ரவிதாசன், நிர்வாகிகள் சிவாஜி, ஏ. திருமுருகன், எல்.சிவகுமார், பி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது, போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் பாது காக்க கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும், மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.