tamilnadu

img

பச்சையப்பன் கல்லூரி விவகாரம்: தொடரும் மர்மங்கள்!

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகச் சீர்கேடு குறித்து அண்மை யில் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக பலரும் தொடர்பு கொண்டனர். அதிலும் குறிப்பாக கல்வியாளர்கள், முன்னாள்-இன்னாள் மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி செயலாளர் உள்ளிட் டோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் மேலும் அதிக அக்கறையுடன் ஏராளமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின்  நிர்வாக செயலாளராக செயலாற்றி வருபவர் துரைக்கண்ணு. அவர் கூறுகையில், "ஒரு தனி யார் நிறுவனத்தில் காவலாளியை தேர்வு செய்வதற்கு கூட விதிமுறைகள் வரை யறுக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் பொழுது அடுத்த தலைமுறையை உருவாக்கும் -மாணவர்களுக்கு பாடம் நடத்தும் -ஆசிரியர்களின் தகுதி, திறமை மிக மிக அவசியம். அதில் சந்தேகம் எழுந்துள்ளதால் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பது உண்மைதான்.  கடந்த பத்தாண்டு கால  கல்லூரி உதவி பேராசிரியர்கள் கல்வி தகுதி, பணி அனுபவ சான்று களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதன்படி ஆய்வு செய்ததில், எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் தொலைதூர கல்வி மூலம் பட்ட, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு களை முடித்துள்ளார். அவருக்கு பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர் பணி வழங்கியுள்ளனர்.

தமிழ் இளங் கலையை தமிழ்நாட்டில் முடித்த ஒருவர் ஆந்திராவில் முதுகலை தமிழ் படித்ததாக போலிச் சான்று கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட உதாரணம் அதிகம் உள்ளது. ஆனாலும், இந்த விவகாரத்தில் எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்து விட முடியாது. அப்படி செய்யவும் மாட்டேன். தற்போது நீதிமன்றத்தில் நிலு வையில் இருக்கும் 67 வழக்கு களையும் விரைந்து முடிவுக்குக் கொண்டுவர அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வரு கிறோம். முன்னாள் மாவட்ட நீதிபதி, கல்வியாளர்களை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை யும் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அமைத்து இருக்கிறது.  அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் அறக்கட்டளை தேர்தலையும் முறைப்படி நடத்த முடியும். ஆசிரியர் நியமன சர்ச்சைக்கும் சுமூக மான தீர்வு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டி ருக்கிறோம். பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் படிக்கும் மாண வர்களில் பெரும்பகுதியினர் கிராமங் களைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை-எளிய குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள். அவர்களது கற்றல், கற்பித்தல் திறன் மேம்பாடு மிகவும் முக்கியமானது. ஆகவே, அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, கட்டடங்களை புனர மைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் வருகிறோம்" என்கிறார்.

"கல்லூரி உதவிப் பேராசிரியர் களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிய மனம் செய்யக்கூடாது. எம்பில், பிஎச்டி முடித்திருக்க வேண்டும். அதை விட மிக முக்கியம் ஆசிரிய ராக பணியாற்றிய முன் அனுபவம் தேவை. துறை வாரியாகவும் இட ஒதுக்கீட்டு முறை அமலாக்க வேண்டும் என்று மாநில உயர்கல்வி வாரியமும் வழிகாட்டுகிறது. ஆனாலும், பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளுக்கு 2014 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் 206 உதவி பேராசிரியர்கள் 2015 ஆம் ஆண்டில் 66 உதவி பேராசி ரியர்களை நியமனம் செய்த அறக்கட்டளை உறுப்பினர்கள், முந்தைய அதிமுக ஆட்சியின் போது பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் மாநில உயர் கல்வி வாரியத்தின் விதிமுறைகளை முற்றிலுமாக மீறியுள்ளனர்.  கல்லூரிகளில் கவுரவ விரிவுரை யாளர்களாக பல ஆண்டுகள் பணி செய்த அனுபவம், தகுதி இருந்தும் எங்களின் பணி வாய்ப்புகளை பறித்துக் கொண்டனர். இதனால் நீதி மன்றத்தில் முறையீடு செய்தோம்" என்கின்றனர் பாதிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள். "கல்லூரி பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு அந்தந்த கல்லூரி யில் உள்ள பாட துறைகளில் தேவை களை கருத்தில் கொண்டு தேர்வு குழுவே நியமித்துக் கொள்ளலாம். அது யாராகவும் இருக்கலாம். அந்த ஆசிரியர் 2012ஆம் ஆண்டுக்கு முன்பு பிஎச்டி முடித்திருந்தால் போதும். அப்படி இல்லையென்றால் நெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதுமானது. ஆகவே, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து ஆசிரியர் நியமன பிரச்சனைக்கு விரைந்து முடிவு கட்ட வேண்டும்" என்கின்றனர் கல்லூரி ஆசிரியர்கள்.

அதிகாரம் யாருக்கு?
"கல்லூரி ஆசிரியர் நியமனம் என்பது பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் மற்றும் மாநில உயர் கல்வி வாரியம் வகுத்துள்ள உரிய வழிகாட்டுதலின் படி தகுதிகள் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால், பச்சையப்பன் கல்லூரியின் 252 ஆசிரியர்கள் நியமனத்தில் உண்மை என்றால் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பும், கடமையும் கல்லூரி நிர்வாகத்திற்கும் கல்லூரி கல்வி இயக்ககத்திற்கும் மட்டுமே உண்டு. இதில் நீதிமன்றமும், விசாரணைக் குழுவும் தலையிடுவது முறையாக இருக்காது என்கின்றனர்.

மாற்றம் யாருக்காக?
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய அளவிலான தகுதி தேர்வு (நெட்), மாநில அளவி லான தகுதித் தேர்வு (செட்) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நேரடி யாக படித்திருந்தால் மட்டுமே தகுதித்தேர்வில் விதி விலக்கு அளிக்கப்படும்.  மேலும், கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று விதிகளை வரையறை செய்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு, தொலை நிலைக் கல்வி அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது பட்டமேற்படிப்பு பிஎச்டி, எம்பில் படிப்புகள் முடிந் திருந்தால் அது தகுதி ஆகாது என்றும் கூறியிருக்கிறது. இது பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கும் பொருந்தும். கல்லூரி ஆசிரியர் பணிக்கு சந்தை மதிப்பு ரூபாய் 15 லட்சத்தி லிருந்து 40 லட்சம் வரைக்கும் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக மாற்றி கட்டாய வசூல் வேட்டைக்கு வழிவகுத்தது அதிமுக ஆட்சி.  அரசு, தனியார் கல்லூரி நிர்வாகம், பணமுள்ள பட்டதாரி கள் என மூன்று பேரும் சேர்ந்து நடத்திய இந்தக் கூட்டுப் பேரம் குறித்து நீதிமன்றமும் நீதிபதிகளும் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தது வியப்பாக இருக்கிறது. அறக் கட்டளைக்கு இழப்பை ஏற்படுத்தி ஊழல், முறைகேடு செய்த வழக்கையும் ஆசிரியர் தகுதி, நியமன வழக்கையும் ஒன்றாக இணைத்து முடிச்சுப் போட்டு 'இடியாப்பச் சிக்கலை' உருவாக்க முயற்சிக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல. நீதிமன்ற வழக்குகள், நீதி மன்றம் அமைத்துள்ள குழு ஆகியவற்றை காரணம் காட்டி மேலும் காலம் கடத்த நினைத்தால் பச்சையப்பன் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாழாகும். அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், விரைவில் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இந்நிலை யில், 252 ஆசிரியர்கள் நியமனமும் தகுதியற்றது என்று ஒரே வரியில் ஒதுக்கிவிட முடியாது. இதில் தகுதியானவர்களும் இருக்  கிறார்கள். அவர்கள் யார்? யார்? என்பதை நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். அடிப்படைத் தகுதி கூட இல்லாதவர்கள், போலிச் சான்றுகள் கொடுத்து ஏமாற்றியவர்கள் யார்? யார்? என்பதையும் கண்டுபிடிப்பது அவசியம்.  

சி.ஶ்ரீராமுலு