ஊதிய உயர்வு கோரி மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, ஏப்.22 - ஊதிய உயர்வு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் எம்.சர வணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சியில் பணிபுரியும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு, தூய்மை காவலர், தூய்மை பணியாளர்கள், வரி வசூலர், மேஸ்திரி ஆகியோர்களுக்கு ஓய்வூதியம், சர்வீஸ் தொகை வழங்கவும். தமிழக முழுவதும் கொரோனா காலங்களில் களப்பணியாற்றிய பணி யாளர்களுக்கு அரசு அறிவித்திருந்த கொரோனா ஊக்கத்தொகை ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும், ஊராட்சி உறுப்பினர் பி.டி.பி.சி.தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு ஊதியம் ரூ.505 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை விளக்கி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கவுரவத்தலைவர் கே.தங்க ராசு,பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் ஏ.வீராசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எம். செந்தில்,அங்கன்வாடி செயலாளர் கே.பிரேமா,மாநில குழு உறுப்பினர் ஏ.இளங்கோவன், மாவட்டம் பொருளாளர் கே.பாலு,எஸ்.முருகேசன், ஜி.சரவணன், பி.செந்தில்,எஸ்.சையத்சலீன், மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட னர். நிறைவாக ஒன்றிய பொருளாளர் ஆர்.சிவசங்கரன் நன்றி கூறினார்.