tamilnadu

மருத்துவமனைகளில் காவல்துறை மையம் அமைக்க உத்தரவு

சென்னை,செப்.2- மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ  மற்றும் ஊரக நலப் பணி இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ மனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை  தமிழ்நாடு சுகாதாரத்துறை அமல்படுத்தியது. நாட்டில்  உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி களில் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் மருத்து வத்துறை அதிகாரிகளுடன் 2 முறை நடந்த ஆலோசனை யில் புதிய நடைமுறைகள் சுற்றறிக்கை மூலம் அனுப்பப் பட்டுள்ளன. மருத்துவமனை பணியாளர்களின் பாது காப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என 2 கமிட்டி கள் அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.