சென்னை, ஆக. 21 - தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் சென்னையில் இருந்தும் மற் றும் பிற இடங் களில் இருந் தும் கூடுத லான பயணி கள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேரு ந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்து களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்ப கோணம், மதுரை, நெல்லை, நாகர்கோ வில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங் களுக்கு 485 பேருந்துகள் இயக்கப்படு கின்றன.
அதேபோல், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக் கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்கு நர் தெரிவித்திருக்கிறார்.