விழுப்புரம்.ஆக.23- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.18 லட்சத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு சுற்றுச் சுவர் மற்றும் நுழைவு வாயில் கட்டப்பட்டது. இந்த நுழைவு வாயிலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண் முகம் திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் இல.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட 4 புதிய பேருந்து களை புதிய வழித்தடங்களில் இயக்கி வைத்தார். இவற்றில் விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளும், விழுப்புரம் வழியாக புதுச்சேரி- சேலம் மார்க் கத்தில் ஒரு புதிய பேருந்தும் இயக்கி வைக்கப்பட்டன. விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், எம்எல்ஏ எம்.சக்கரபாணி, மாவட்ட வருவாய் அலுவலர் க.சரஸ்வதி, திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்து கிருஷ்ணன், பொது மேலாளர் வெங்கடேசன், துணை மேலா ளர் குணசேகரன், கோட்டாட்சியர் ராஜேந்திரன், வட்டாட்சி யர் பிரபு வெங்கேடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.