சென்னை, செப்.19- சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பல்வேறு கட்டிடங்களை முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை மயிலாப்பூரில் 288 காவ லர் குடியிருப்புகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 162 காவலர் குடி யிருப்புகள், 3 காவல்நிலையங்கள், 2 காவல் துறை இதர கட்டிடங்கள், 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டி டங்கள், அந்தத் துறையினருக்கான 13 குடியிருப்புகளையும் முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கம் சார்பில் வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ள ளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலூர், மதுரை, நெல்லை மாவட் டங்களில் 11 சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்தார்.