tamilnadu

img

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமற்றது! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமற்றது என்றும், பாஜக-வின் அகங்காரத்தை திருப்திப்படுத்தும் இந்த முன்மொழிவு என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது. இது இந்தியாவின் பலதரப்பட்ட தேர்தல் முறையின் சிக்கல்களை புறக்கணிப்பதுடன், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. தேர்தல் பணிகள், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொண்டால் இத்திட்டம் சாத்தியமற்றது. இது ஆட்சியின் இயல்பான போக்கை சீர்குலைக்கும். அனைத்து அலுவலக விதிமுறைகளிலும் சீரமைப்பு தேவைப்படும்.
இந்த முன்மொழிவானது பா.ஜ.க-வின் அகங்காரத்தை திருப்திப்படுத்தும் நடவடிக்கையாகும், ஆனால் அவர்களால் ஒருபோதும் இதனை செயல்படுத்த முடியாது. ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது. ஒன்றிய அரசு, இதுபோன்று திசைதிருப்பும் தந்திரங்களில் ஆற்றலை வீணாக்காமல், வேலையின்மை, விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு சமமான முறையில் வளங்களை வழங்குதல் போன்ற நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.