tamilnadu

ஒரு நிமிட பட்டா திட்டம் : அரசு நடவடிக்கை

சென்னை, செப்.4- தமிழ்நாடு அரசு பொதுமக்கள் வசதிக்காக பத்திரப்பதிவின் போது உட னடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து  வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை  (தானியங்கி பட்டா) நடைமுறைப் படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதி களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங் களை பத்திர பதிவின் போது பெயர்  மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப் படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உட னடியாக பட்டா வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஒரு நிமிட பட்டா  திட்டத்தை, தமிழக அரசு விரிவாக்கம் செய்துள்ளது. அதற்காக பத்திரப்பதி வுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப் பட்டு உள்ளன. அதன் மூலம் இனி, கிரா மங்களில் உள்ள வீடுகள் பத்திரப்பதிவு செய்யும் போது உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.

தமிழக அரசின் உத்தரவு காரண மாக, பத்திரப்பதிவு செய்யும் போது பட்டா மாற்றம் செய்யும் பணிகள் முழு அளவில் நடந்து வருகிறது. உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போது உடன டியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவ ரங்களை மக்கள் எளிதாக பார்க்கும் வகையில் https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற  இணைய தளத்தை மேம்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 317 தாலுகாக் களில் 17 தாலுகாக்கள் முற்றிலும் நகர்புறத்தில் உள்ளது. இது தவிர மீதமுள்ள 300 தாலுகாவில் முதல் கட்டமாக 220 தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளில் பட்டா விவரங்களை பார்வையிடலாம்.

இந்த இணையதளம், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. எனவே தற்போது 220 தாலுகாக்களில் உள்ள நத்தம் குடி யிருப்புகளை பத்திரப்பதிவு செய்யும் போது இனி பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சனிக் கிழமை சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. தற்போது பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகள் தடங்கலின்றிநடக்கிறது.