கல்பாக்கம் அருகே கார்கள் மோதல் ஒருவர் பலி
மாமல்லபுரம், செப்.23- கூவத்தூர் அடுத்த நெடு மரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தனது மருமகள் மோனிசா, 2 வயதான பேத்தி மோனிகா ஆகியோருடன் திங்களன்று (செப்.23) கல்பாக்கம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்., அப்போது வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஒடியது, அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தி லேயே வெங்கடேசன் உயிரிழந்தார். மருமகளும், பேத்தியும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த சதுரங்கபட்டினம் போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்து உயிர் தப்பிய பெண், குழந்தை இருவரையும் சிகிச்சைக் காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதிரே வந்த காரில் இருந்த இரு வர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
ஒருகோடி கையாடல் தனியார் நிறுவன ஊழியர் கைது
சென்னை, செப்.24- குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகை குமார் (வயது 42) என்பவர் தி.நகர், கிரியப்பா சாலை யில் உள்ள தனியார் நிறு வனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனம் தனது ஊழியர்கள் மூலம் சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் கணக்குகளை சரி பார்த்தபோது, மேற்கண்ட நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேற்படி தனியார் நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகை குமார் சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீ சார் தீவிர விசாரணை செய்த னர். இது தொடர்பாக ஆர்.ஏ. புரத்தைசேர்ந்த பிரபு என்பவரை கைது செய்த னர். அவரிடமிருந்து பணம் ரூ.63 லட்சத்து 69 ஆயிரம் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு தர்ணா கடலூர், செப்.23 - கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (செப்.23) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பண்ருட்டி வட்டத்தில் உள்ள அங்கு செட்டிபாளையம் கிரா மத்தில் இருந்து வருகை தந்த பொதுமக்கள், ஆட்சி யர் அலுவலக வளா கத்துக்குள் திடீர் என தர்ணா வில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஏழைகளின் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை,செப்.23- திருவண்ணாமலை-செங்கம் சாலை அருகே சமுத்திரம் ஏரி அருகே, சந்தை மேடு, ஏரிக்கரை, இந்திரா நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். தற்போது அவர்கள் வசிக்கும் குடியிருப்பு, நீர்பிடிப்பு பகுதி எனவும், அதை காலி செய்ய வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. எனவே அருகில் உள்ள வைர குன்று மலை அடிவாரத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.