tamilnadu

img

ஒரு மணி நேரம் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்ய அறிவுறுத்தல்

சென்னை:
குழந்தைகள் தினத்தன்று ஒரு மணி நேரம் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்யுங்கள் என்று பெற்றோருக்கு பள்ளிக்கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொருஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தஆண்டும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில அளவில்குழந்தைகள் தின கொண்டாட்ட விழா நடைபெற உள்ளது. அதேபோல், ஒவ்வொரு பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படவிருக்கிறது.இந்த நிலையில் பள்ளிக்கல்விஇயக்குநர் ச.கண்ணப்பன் குழந்தைகள் தினம் தொடர்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக் கிறார். அதில் பெற்றோருக்கு ஒருவேண்டுகோளும் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

குழந்தைகள் தினத்தன்று நவம்பர் 14 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்களுடைய செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வையுங்கள். குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் மின்சாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருங்கள். இதை ஏதோ அன்றைய ஒரு நாளுக்குமட்டும் செய்யாமல், வாரத்திலோ அல்லது மாதத்திலோ கடைப் பிடியுங்கள் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகளுடன் பெற்றோர்மேலும், www.gadgetfreehour.comஎன்ற இணையதளத்தில் பெற்றோர் சென்று அதில் குழந்தைகளோடு நேரம்செலவிடுவது தொடர்பான அறிவுரைகள்  ழங்கப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினத்தில்அந்த இணைய தளத்தை சென்று பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளுக்கு பதில் அளிக்கவும் பெற்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதில் அளிக்கும் பெற்றோருக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

;