tamilnadu

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு

சென்னை, ஆக.5- பிறப்புச் சான்றிதழ்களில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்கா தவர்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முக்கியச் சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணம் ஆகியிருக்கிறது பிறப்புச் சான்றிதழ். காரணம், ஆதார் கார்டு, டிரைவிங் லை சென்ஸ், பாஸ்போர்ட் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு வேலை போன்ற அனைத் திற்கும் பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயமாகி இருக்கிறது.

இந்நிலையில், பிறப்பு சான்றிதழ்களில் 15 ஆண்டு களாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக் குள் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.

இதுகுறித்து பொது சுகா தாரத்துறை இயக்குநர், பிறப்பு,  இறப்பு சான்றிதழ் பதிவாளர் செல்வவிநாயகம் கூறிய தாவது; 

குழந்தை பிறந்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத்துறை வாயிலாக, பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழ்களில், குழந்தை பிறந்த 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும்.

அவ்வாறு பெயர் சேர்க்காத வர்கள் டிசம்பர் 31-ஆம் தேதிக் குள் பெயர் சேர்க்க வேண்டும்.  மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

பெயர் விடுபட்டிருந்தால், மாணவர்கள் வாயிலாக பெற் றோருக்கு தகவல் அளித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற் காக, பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளர் கையொப்ப மிட்ட படிவம் பெற்று பெயர் சேர்க்கலாம். 

எதிர்காலத்தில் மாணவர் களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்தாண்டுக்குள் பெயர்களை சேர்க்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.